21 July 2014

அவை விதி எண் 110 ன் கீழ் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவை விதி எண் 110ன் கீழ் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Thanks to www.tntam.in 
தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை... 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு 09.05.2013 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 31.05.2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. 

14.06.2013 முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.07.2013 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். 

21.07.2013 முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

29.07.2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 07.10.2013 தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 11.10.2013 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

22.10.2013 முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, அக். 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும்,14 இடங்களில் 2,276 பேருக்கு நடந்தது. 24.10.2013 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான 212 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

06.11.2013 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 23.12.2013 முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். 

 31.12.2013 முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெற்றது. 04.01.2014 முதுகலை தமிழ் ஆசிரியர்களின், 605 பேரின் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), வெளியிட்டது. 

09.01.2014 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

10.01.2014 தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 17.01.2014 திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

18.02.2014 விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. 

21.02.2014 முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெற்றது. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, மீதமுள்ள‌ 11 பாடங்களுக்கான‌ இறுதி தேர்வு பட்டியல் எப்போது வரும் என்ற கேள்விக்கே விடைதெரியாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்
TNTET: "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்: 1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம். 2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

  TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப்...