ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித்தேர்வில் சலுகை கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி 2வது முறையாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இதிலும் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, சஙாகீதா உள்ளிட்ட 14 பேர் ஒதுக்கீடுஅடிப்படையில் தங்களுக்கு தகுதி மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும்எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:தரம்வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது என்று தமிழகஅரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. தரமுள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் எந்த சலுகைகளையும் காட்ட முடியாது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.சில மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளது தமிழக அரசுக்குப் பொருந்தாது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆசிரியர் நியமனத் தில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று மிகத்தெளிவாக உத்தரவிட்டுள்ளன. எனவே, சலுகை தரக்கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறுநீதிபதி உத்தரவிட்டார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment