டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A உள்ளிட்ட அரசுத் தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவுகளில் 645 காலி பணியிடங்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: குரூப் 2 (நேர்காணல் பதவிகள்): 50 இடங்கள் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்): 595 இடங்கள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றால், அரசின் உயர்ந்த பதவிகளை பெற முடியும். இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் ₹36,900-₹1,35,100 (நிலை 16-18). குரூப் 2A (நேர்காணல் இல்லை) தேர்ச்சி பெற்று பணி பெறுபவர்களின் குறைந்த பட்சம்...