ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்
நெல்லையில் கிருஷ்ணசாமி பேட்டி
நெல்லை, ஜூன் 11:
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான 76 சமுதாய மக்களே தாழ்த்தப்பட்ட பிரிவைசார்ந்தவர்கள் ஆவர். எஸ்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் குறிக்காது. 76 ஜாதிகளின் உட்பிரிவைஇந்திய அரசு �சமூக நீதித்துறை� என்ற ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 76 ஜாதிகளின் உட்பிரிவுகளை கண்காணிக்கும் துறையை �ஆதிதிராவிடர் நலத்துறை� என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். பல ஜாதிகள் அடங்கிய எஸ்.சி. பிரிவுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் நலத்துறை இருப்பது கூடாது.எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு 18% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என்பது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதில் தொடர்ந்து இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment