Posts

Showing posts from November 17, 2014
TNPSC:குரூப்-4 தேர்வு: 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13.38 லட்சம் பேர் போட்டி. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை சற்று குறையக் கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர். டிசம்பர் 21-ம் தேதி தேர்வு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற் காக டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. குரூப்-4 தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற காரணத்தினாலும், நேர்முகத் தேர்வு இல்லாததால் எழுத்துத் தேர்வில் வெற