Posts

Showing posts from April 22, 2013
ஜூன் 9ல் மாவட்டங்களில் பேரணி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு திருவண்ணாமலை: 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நிரப்ப வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக தமிழக அரசு மூவர் குழுவை நியமித்தது. அந்த குழுவின