Posts

Showing posts from July 9, 2022
Image
  அதிர்ச்சி..! தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தற்காலிக ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும், தகுதியான நபர்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரையில், அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்க
Image
  TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..  தமிழக முழுவதும் குரூப் 2, குரூப் 2A தேர்வு கடந்த மே 21ஆம் தேதி நடந்து முடிந்தது. அதில் 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வை காட்டிலும் இந்த ஆண்டு அனைத்து கேள்விகளும் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றன. இதனிடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவின வகுப்பை சேர்ந்த ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், BC வகுப்பை சேர்ந்த ஆண்கள் ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், MBC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 151-156 வரையிலும், பெண்கள் 145-150 வரையிலும், BC (M) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 147-152 வரையிலும், பெண்கள் 140-145 வரையிலும், SC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 147-152 வரையிலும், SC (A) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையில
Image
  கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல். கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என்று சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கென தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மாணவர்களுக்கு 11, மாணவிகளுக்கு 5 என மொத்தம் 16 விடுதிகள் உள்ளன. சென்னையில் இயங்கி வரும் கல்லூரிகளில் பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள். இவர்களில் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிக