24 December 2014

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு 2க்கான கலந்தாய்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி - IIஏல் அடங்கிய பதவிகளுக்காக தேர்வெழுதியவர்கள் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2013-2014- [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 06.02.2014 மற்றும் 16.04.2014ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 29.06.2014 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 29.12.2014 முதல் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கான (2013-14) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 27.01.2015 முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset சமையல் காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டுவிட்டதாஎன்பதைஅறிய,பி.எஸ்.என்.எல்.,நிறுவனம்,இலவசஎஸ்.எம்.எஸ்.,சேவையைஅறிமுகம்செய்துள்ளது.இச்சேவையை,ஆதார்எண்உள்ளவர்கள்மட்டுமேபயன்படுத்தமுடியும். காஸ் மானியம்பெற,ஆதார்எண்ணோடு,வங்கிக்கணக்குஎண்அளிக்கவேண்டும்.ஆதார்எண்இல்லாதவர்கள்,வங்கிக்கணக்குஎண்ணைமட்டும்கொடுக்கவேண்டும்.ஜனவரிமுதல்,இந்தநடைமுறைஅமலுக்குவருவதால்,இம்மாதஇறுதிக்குள்,ஆதார்எண்அல்லதுவங்கிக்கணக்குஎண்ணை,காஸ்முகமை,வங்கியிடம்அளிக்கும்பணி,மும்முரமாகநடக்கிறது.காஸ்முகமைமற்றும்வங்கியில்இந்தவிவரங்களைஅளித்தபின்,காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டதாஎன்பதைஅறிய,இவலசஎஸ்.எம்.எஸ்.,சேவையை,பி.எஸ்.என்.எல்.,அறிமுகம்செய்துள்ளது.வாடிக்கையாளர்கள், *99*99#என,மொபைல்போனில்அழுத்தினால், 12இலக்கம்கொண்டஆதார்எண்கேட்கும்.ஆதார்எண்ணைபதிவுசெய்தால்,காஸ்மானியம்பெறவங்கிக்கணக்குஎண்,இணைக்கப்பட்டுவிட்டதாஎன்றதகவலைஅறியலாம்.


உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம்

சென்னை: மாநில உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஹேமந்தும், உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...