Posts

Showing posts from May 27, 2022
Image
  குரூப் 2, 2ஏ தேர்வு - விடைகள் வெளியீடு!! குரூப் 2, 2A எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளது. குரூப் 2, 2A பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது . 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர் . பொதுவாக , தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும் . அதன்படி , தேர்வாணைய இணையதளத்தில் குரூப் 2 தேர்விற்கான உத்தேச விடைகள் (Answer Keys) வெளியாகி உள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்ன
Image
ஜூலை 17ல் நீட் தேர்வு! நாடு முழுவதும் 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்! தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா? தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே மாதம் 5ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு மத்திய அரசின் இடைக்கல்வி வாரியம் நடத்திய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நீட் தேர்வு   இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண
Image
  TNTET தேர்வு எழுதுபவர்களுக்கு.. தேர்வு தேதி குறித்து.. வெளியான முக்கிய தகவல்..!!!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தேர்வு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுவதற்கான அறிக்கை மார்ச் 7ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கிடையில் பி.எட் இறுதி ஆண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அதன்படி இந்த தேர்விற்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து TN TET தாள் 1 இல் தகுதி பெறு
Image
  TNPSC குரூப்-2 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு.. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு. முழு விவரம் இதோ.!!!!!!! சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்தியுள்ளது. அந்த வகையில் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருக்கின்றனர். அதேநேரம் குரூப் 2 தேர்விற்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்திருக்கின்ற நிலையில் இதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதியதில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகின்றது. அதே சமயம் கடைசி கட் ஆப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதன்படி ஒரு பதவியில் கடைசி ஒரு இட
Image
  TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு புதிய சிலபஸ்; டவுன்லோட் செய்வது எப்படி? TNPSC group 4 VAO exam How to download syllabus simple steps here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) இந்த பணியிடங்கள் எழுத்துத்
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, TRB உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அனைத்து தேர்வுகளும் தமிழ் மொழிகளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும் என இருந்த நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Image
  ராணுவப் பள்ளியில் ஆசிரியர், எழுத்தர் பணிவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் முதல்நிலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பைசாபாத்தில் உள்ள ராணுவப் பள்ளி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (அங்கிலம், இயற்பியல், புவியியல் ) பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் (TGT) - ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் முதல்நிலை ஆசிரியர் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடக்கக் கல்வியில் 2 ஆண்டுகள் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். செயல்பாட்டு ஆசிரியர் (கலை மற்றும் கைவினைப் பொருட்கள்) சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இசை ஆசிரியர் தலைமை எழுத்தர் ராணுவத்தில் எழுத்தர் ப
Image
  அறிவியல் தேர்வு; அனைத்தும் எளிமை : பத்தாம் வகுப்பு மாணவர்கள் குஷி கணிதத் தேர்வால் மனரீதியாக கலங்கியிருந்த மாணவர்களுக்கு 'டபுள்' உற்சாகம் தரும் வகையில் எளிய வினாக்கள் நிரம்பிய வினாத்தாளாக அறிவியல் தேர்வு அமைந்ததால் அதிக மதிப்பெண்களை அள்ளலாம் என பத்தாம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.மாணவர்கள் கூறியதாவது: தேர்வு ரொம்ப எளிமை கே.சிவானி, எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தது. திருப்புதல் தேர்வில் வந்திருந்த சில வினாக்களும் இடம் பெற்றிருந்தன. நன்றாக படித்திருந்தால் 75 க்கு 75 மதிப்பெண் வாங்க முடியும். அனைத்து வினாக்களும் பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து வந்திருந்தன. அனைத்து கேள்விகளும் தெரிந்தவையாக இருந்ததால் தேர்வு சுலபமாக இருந்தது.அனைவரும் பாஸ் தான்வி.செண்பகவள்ளி, அறிவியல் ஆசிரியர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: வினாத்தாள் மிகவும் ஈசியாக இருந்தது. திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பான்மையான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம
Image
  TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான விடை குறிப்புகள்.! ஆன்லைன் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.! முழு விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2A தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் இல்லை. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று மாலைக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வ