Posts

Showing posts from May 29, 2013
சென்னை அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து சென்னைடி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   கண்டன ஆர்ப்பாட்டம் 2013–2014– ம் கல்வி ஆண்டில் இருந்து தமிழக அரசின் 3,200 தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் , 6– ம் வகுப்பிலும் ஆங்கிலமொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது .  இந்த நிலையில் , அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்வழிக்கல்வி கூட்டு இயக்கம் அமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டி . பி . ஐ . வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .  தமிழ் அமைப்புகள் பங்கேற்பு இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி தலைவர் பெ . மணியரசன் , திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன் , தபசிகுமரன் , தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு , தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சைதை சிவா , தமிழ்த்தேச மக்கள் கட்சி நிர்வாகி தமிழ்நேயன் , ம . தி . மு . க . துணை பொதுச்செயலாளர் மல்லை