22 October 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் செவ்வாய் (அக்.22) மற்றும் புதன்கிழமைகளில் (அக்.23) நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய விவரம் மற்றும் அழைப்புக் கடிதம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட பயோ-டேட்டா படிவங்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாளப் படிவம், தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட 2 நகல்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவரப்படும் சான்றிதழ்கள் மட்டுமே பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு பெறப்பட்ட சான்றிதழ்கள் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படாது. ஒவ்வொரு மையத்துக்கும் ஒன்று முதல் மூன்று மாவட்டங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக, இன்று நடக்கும் சான்றிதழ்சரிபார்ப்பு முடிவை வெளியிட, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
சங்கரன்கோவில் ஜோதி ஆபிரகாம்,தாக்கல் செய்தமனு: நான் எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., ( இதழியல்),பி.எஸ்.சி., எம்.எட்., - எம்.பில்., படித்துள்ளேன். முதுகலை பட்டதாரி (வரலாறு) ஆசிரியர்கள், 173 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல் நடத்திய தேர்வில், எனக்கு 111 மதிப்பெண் கிடைத்தது. இதே மதிப்பெண் எடுத்த ஒருவரை, அக்., 22ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டி.ஆர்.பி., அழைத்துள்ளது. எனக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை.
டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனரிடம் புகார் செய்தேன். முன்பு,1:2 விகிதம் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பர். தற்போது 1:1 விகித அடிப்படையில் அழைத்துள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 1997ல், பி.எட்., பதிவு செய்து, காத்திருக்கிறேன். இவ்வாறு பதிவு செய்து, 10 ஆண்டுகளுக்கு மேல்,வேலைக்காக காத்திருப்போருக்கு, டி.ஆர்.பி., தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது. இதனால், என் மதிப்பெண், 115 ஆக உயரும். சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு"ள்ளார்.
நீதிபதி, எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. "தேர்வு எழுதி தகுதியானவர்கள் மற்றும் விடுபட்டவர்களின் பெயர்களையும் ஒருங்கிணைத்து, பட்டியல்தயாரித்து, டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது.
அக்., 28க்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது' என உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் தமிழ் தவிர மீதமுள்ள 2,276 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவ்வழக்கு காரணமாக தேர்வு முடிவு வெளியிடுவது சற்று தாமதமாகக் கூடும் எனத் தெரிகின்றது
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் செவ்வாய் (அக்.22) மற்றும் புதன்கிழமைகளில் (அக்.23) நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய விவரம் மற்றும் அழைப்புக் கடிதம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட பயோ-டேட்டா படிவங்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாளப் படிவம், தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட 2 நகல்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவரப்படும் சான்றிதழ்கள் மட்டுமே பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு பெறப்பட்ட சான்றிதழ்கள் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படாது. ஒவ்வொரு மையத்துக்கும் ஒன்று முதல் மூன்று மாவட்டங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக, இன்று நடக்கும் சான்றிதழ்சரிபார்ப்பு முடிவை வெளியிட, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
சங்கரன்கோவில் ஜோதி ஆபிரகாம்,தாக்கல் செய்தமனு: நான் எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., ( இதழியல்),பி.எஸ்.சி., எம்.எட்., - எம்.பில்., படித்துள்ளேன். முதுகலை பட்டதாரி (வரலாறு) ஆசிரியர்கள், 173 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல் நடத்திய தேர்வில், எனக்கு 111 மதிப்பெண் கிடைத்தது. இதே மதிப்பெண் எடுத்த ஒருவரை, அக்., 22ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டி.ஆர்.பி., அழைத்துள்ளது. எனக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை.
டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனரிடம் புகார் செய்தேன். முன்பு,1:2 விகிதம் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பர். தற்போது 1:1 விகித அடிப்படையில் அழைத்துள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 1997ல், பி.எட்., பதிவு செய்து, காத்திருக்கிறேன். இவ்வாறு பதிவு செய்து, 10 ஆண்டுகளுக்கு மேல்,வேலைக்காக காத்திருப்போருக்கு, டி.ஆர்.பி., தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது. இதனால், என் மதிப்பெண், 115 ஆக உயரும். சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு"ள்ளார்.
நீதிபதி, எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. "தேர்வு எழுதி தகுதியானவர்கள் மற்றும் விடுபட்டவர்களின் பெயர்களையும் ஒருங்கிணைத்து, பட்டியல்தயாரித்து, டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது.
அக்., 28க்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது' என உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் தமிழ் தவிர மீதமுள்ள 2,276 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவ்வழக்கு காரணமாக தேர்வு முடிவு வெளியிடுவது சற்று தாமதமாகக் கூடும் எனத் தெரிகின்றது
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது.
அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது.
வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது.
அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது.
வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...