Posts

Showing posts from January 12, 2019
எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள்.  மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
Image
2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்! மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க நெறி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: 3ம் பருவ தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்-டாப் வழங்க அரசிடம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியதும், லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தற்போது எல்கேஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது. அப்போது, நடுநிலை பள்ளிகளுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் அங்கு பணி செய்யும்போது அவர்களை கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும். எல்கேஜி., வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களிடம் ஒழுக்கத்தை ப