Posts

Showing posts from April 4, 2023
Image
 '' தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே ஆதிதிராவிட நலப்பள்ளிகள் இணைப்பு' தேசியக் கல்விக் கொள்கை 2020யை தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர் எனவும், ஆதி திராவிடர் பள்ளிகள் என்ற சிறப்பு பெயரில் பள்ளிகள் செயல்பட்டால் தேசியக்கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்பதால், அந்தப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு கொண்டு வர திட்டம் எனவும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார். ஆதி திராவிட நலக்கூட்டமைப்பின் சார்பில் அறிவு சமூகம் என்ற அமைப்பு, ஆதி திராவிட நலப் பள்ளிகளை இணைப்பது குறித்து 3 நாட்கள் கருத்தரங்கை நடத்தியது. ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்காமல், சமமான கல்வி கற்கும் வாய்ப்பினை அளிக்காமல் இணைப்பது என்பது அந்தப் பள்ளிகளை மூடுவதற்கு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில் அரசு முடிவு செய்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பரிந்துரைகள் குறித்து அறிவு சமூகத்தின் தலைவர் தமிழ்முதல்வன் கூறும்போது, ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்
Image
  தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!! தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி விவரங்களும் வெளியீடு. மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அழுத்தம். தமிழகத்தில் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 69 ஆயிரம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவலை தெரிவித்து இருக்கிறது . இது மட்டுமில்லாமல் ஆந்திரா , சட்டீஸ்கர், டெல்லி, கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் பல வகையான பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில், ஒடீஷாவை சேர்ந்த சந்திரசேகர் சாகு என்ற உறுப்பினர் , புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாநிலங்களில், மாநில மொழிப்பாடத்தில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை விவரங்களை கேட்டிருக்கிறார். அதற்கு கல்வி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி
Image
  7,500 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட SSC!! சம்பளம் : ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம் Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். CGL ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   தேர்வு முறை: SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்
Image
  10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் - பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு 2012 ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பணி நியமனத்துக்கான ஆசிரியர்களுக்கு தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2 ல் , 15 ஆயிரத்து 297 பேர்மட் டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . அதைத் தொடர்ந்து தாள் -1 ல் , 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங் கேற்றனர் . அதில் 21 ஆயி ரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த 2012 ம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம்  பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை ( எண் 149 ) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் கூறிய பாடத்திட
Image
  TANCET ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? TANCET 2023 விடைக்குறிப்பு: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET) விடை குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டு உள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu-க்கு சென்று விடைக்குறிப்பை சரிபார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்து விடைக்குறிப்பை சரிபார்க்க வேண்டும். TANCET 2023: விடைக்குறிப்பை பதிவிறக்குவதற்கான படிகள் படி 1: TANCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://tancet.annauniv.edu/tancet/index.html படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'விடைக் குறிப்புகள் 2023' இணைப்பைக் கிளிக் செய்யவும். படி 3: மின்னஞ்சல் ஐ.டி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா போன்ற உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும். படி 3: உங்கள் உள் நுழைவு சான்றுகளை வெற்றிகரமாக உள்ளிட்ட பிறகு, விடைக் குறிப்பு உங்கள் திரையில் தெரியும். படி 4: எதிர்கால குறிப்புக்காக விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும். TANCET 2