Posts

Showing posts from July 29, 2023
Image
  ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி கரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022ஆ-ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார். தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷ்யாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மய்யத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷ்ய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாசார மய்ய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.  நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- இந்தியாவுக்கு ரஷ்யா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ
Image
  பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31ல் பெறலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச்/ஏப்ரல் 2023, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/ மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ம் தேதி முதல் வழங்கப்படும்.  பள்ளி மாணவர்கள் தாங்கள் ப்யின்ற பள்ளி வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Image
  பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஆக.1ல் இறுதி கட்ட கலந்தாய்வு- புதுச்சேரி கல்வித்துறை  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதியும் குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு 2ம் தேதியும் நடக்கிறது.கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்தது. அதில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் அண்மையில் நடந்த துணைத் தேர் வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இக்கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகர், மாற்றுச்சான்றிதழ், ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.அதில் 300 வரை மதிப்பெண் பெற்றவுர்களுக்கு 1ம் தேதி காலை 9:30 மணிக்கும், 299 முதல் 250 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதியம் 2:30 மணிக்கும், 249 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெறும்.  குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவ
Image
  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட 38 சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நிராகரிக்க வேண்டும்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளியை கடந்த26-ம்தேதி சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் க
Image
  8ம் வகுப்பு தேர்வுக்கான "ஹால்டிக்கெட்". தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!! தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வருகின்ற ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .