2 October 2017
காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., ௨௨ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி
ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., ௨௨ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி
ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட் மற்றும் போட்டி தேர்வு தகவல்கள் சேகரிப்பு
கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும் எளிதாக்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜமுருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான், குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபாத், நரேஷ் - ஆந்திரா, பாஸ்கரசேதுபதி - அகமதாபாத் மற்றும் கேரளாவில் கொச்சி உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தினர்.
அங்கு தனியார் பயிற்சி மையங்கள் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., உட்பட நுழைவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு எந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. எவ்வகை பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த முழு தகவல் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுஉள்ள பாடத்திட்டம் தரமானவை தான். ஆனால் நீட் தேர்வு அமலுக்கு பின் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களையும் தாண்டி, வெளி நாடுகள், பிற மாநிலங்களில் எவ்வகை பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிறந்த பகுதிகளையும் புதிய பாடத்திட்டத்தில் இணைக்க பாடத் திட்டக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி பத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படும் தனியார் கோச்சிங் மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்த தகவல் திரட்டப்பட்டது.
மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிளஸ் 1 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., ஜே.இ.இ., படிப்புகளுக்கான நுழைவு
தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறை குறித்தும் தகவல் பெறப்பட்டது.
இதுதொடர்பாக கல்வி செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் குழுவுடன் அக்.,2ல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு ஆலோசனை நடத்துகிறார்,என்றனர்.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும் எளிதாக்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜமுருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான், குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபாத், நரேஷ் - ஆந்திரா, பாஸ்கரசேதுபதி - அகமதாபாத் மற்றும் கேரளாவில் கொச்சி உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தினர்.
அங்கு தனியார் பயிற்சி மையங்கள் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., உட்பட நுழைவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு எந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. எவ்வகை பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த முழு தகவல் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுஉள்ள பாடத்திட்டம் தரமானவை தான். ஆனால் நீட் தேர்வு அமலுக்கு பின் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களையும் தாண்டி, வெளி நாடுகள், பிற மாநிலங்களில் எவ்வகை பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிறந்த பகுதிகளையும் புதிய பாடத்திட்டத்தில் இணைக்க பாடத் திட்டக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி பத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படும் தனியார் கோச்சிங் மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்த தகவல் திரட்டப்பட்டது.
மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிளஸ் 1 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., ஜே.இ.இ., படிப்புகளுக்கான நுழைவு
தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறை குறித்தும் தகவல் பெறப்பட்டது.
இதுதொடர்பாக கல்வி செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் குழுவுடன் அக்.,2ல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு ஆலோசனை நடத்துகிறார்,என்றனர்.
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...