Posts

Showing posts from June 5, 2022
Image
  இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் பாக்கி..! தமிழக அரசை போட்டு தாக்கும் ராமதாஸ்.. இல்லம் தேடி கல்வி- சம்பளம் பாக்கி கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து பணியாற்றி வந்தவனர். இவர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்க வில்லையென்று புகார் எழுந்தது. தன்னார்வலர்கள் பாதிப்பு இந்தநிலையில் இந்த புகார் தொடர்பாக
Image
  கணினி அறிவியல் பாடம்.. கலைஞர் போட்ட உத்தரவு... முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!!! கலைஞரின் பிறந்தநாள் தினம் குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி மாநில ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே.குமரேசன் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கிராமப்புறங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் கணிணிப் பாடத்தை படிக்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்முதலாகக் கணினி பாடத்திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்தினார் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு கலைஞர் கருணாநிதி கணினி அறிவியல் பாடம் என்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதை உணர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதை செயல்படுத்த வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த கணிணி அறிவியல் பாடத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநித
Image
  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றது கடந்த வாரம் கவனம் ஈர்த்த செய்தி. இந்த நிதியாண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர் ஓய்வுபெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தியின் பின்னே, அரசின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளும் ஒளிந்திருக்கின்றன. அரசுத் துறையில் உள்ள 15 லட்சம் பணியிடங்களில் ஏறத்தாழ 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு இயந்திரத்தின் அச்சாணியே அரசு ஊழியர்கள்தான் எனும் நிலையில், ஏறத்தாழ 50 சதவீதம் ஊழியர்கள் இல்லாமல் பல்வேறு பணிகள் முடங்கிக்கிடக்கும் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்கள் கால வரையின்றி காத்திருக்க நேர்கிறது. மறுபுறம், போதிய ஊழியர்கள் இல்லாததால் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்ள நேர்கிறது. அரசு அலுவலகங்களிலேயே பல பணிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்ஸிங் மூலம் ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவது இந்த ஆட்சிய