Posts

Showing posts from August 21, 2023
Image
 11 ஆம் வகுப்பில் கணிதத்தை கைவிடுவது எதிர்காலத்தை பாதிக்குமா? மாணவர்கள் சிலருக்கு கணக்குப் பாடம் என்பது மிகவும் எளிது. அந்தப் பாடத்தை பயில மிகவும் ஆர்வம் காட்டுவர். ஆனால் வேறு சில மாணவர்களுக்கோ கணிதப் பாடம் என்றால் பயம். ஒரு மிரட்சி. கணக்குப் பாடம் என்றாலே அவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும். எனவே, 10-ஆம் வகுப்பில் இருந்து 11-ஆம் வகுப்புக்கு செல்லும் லட்சக்கணக்கான மாணவர்கள், கணிதத்தை தங்களது பாடப் பட்டியலில் வைக்க வேண்டுமா அல்லது முற்றிலுமாக கைவிட்டு விடலாமா என்ற குழப்பத்திலேயே செல்கின்றனர். கணிதத்தை அதிகம் விரும்பாத மாணவர்களில் நீங்கள் இருந்தால், கணிதத்தை விட்டு வெளியேறுவது உங்கள் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்குமா என்று யோசித்தால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கணிதம் எப்போது, எங்கு தேவைப்படுகிறது, நீங்கள் கணிதத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இதைத் தொடர்ந்து படிக்கலாம். கணிதம் எவ்வளவு முக்கியமான பாடம் என்பதை இதன்மூலம் உங்களுக்கு புரிய வைக்க முடியும்.   1. ஏன் கணிதம் அவசியமாகிறது? 12- ஆ
Image
  டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை பரிந்துரைத்த தமிழக அரசு.. கிடப்பில் போட்ட ஆளுநர் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர் சைலேந்திர பாபு. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0, ஆபரேஷன் கந்து வட்டி, ஆபரேஷன் மறுவாழ்வு உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்து சமூகவிரோத கும்பல்களை அதிரடியாக கைது செய்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. 1989 ஆம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் 1992 இல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2001 இல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் 2006 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2019 ஆம் ஆண்டு ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவின்
Image
  ஆசிரியர்கள் பணி அமர்த்தலில் தாமதம் ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ராமதாஸ் வைத்த குட்டு! ஆசிரியர்கள் பணி அமர்த்தலில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் குட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு நடப்பாண்டில் 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து பல மாதங்களாகியும் கூட, ஆசிரியர்களை அமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களிலும் ஏராளமானவை காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பள்