Posts

Showing posts from April 7, 2022
Image
  உயர்நீதிமன்ற தீர்ப்பால் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது! முதல்வர் பரிசீலனை செய்ய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.! உயர்நீதிமன்ற தீப்பால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சிப்பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு உதவிபெறும் பள்ளி
Image
 ` RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடக்கம்'- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கு வரும் 20 முதல் மே 18-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், `குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12 (1) (C) இதன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும். குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கபட்டன' என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலில், `வரும் 2022 - 2023-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE (Right To Education) சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழை
Image
  எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, மேலும் 10 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர்களுக்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, ஏற்கெனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி உள்ள ஆயிரக்கணக்கான காவலர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பதவிக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், காவல்துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான காவலர்களுக்கு தடையில்லாச் சான்றி
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஏற்கெனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதிபெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும், ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்தவும் ஆணையிட்டது. கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
  தமிழ்நாடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % மருத்துவ உள் ஒதுக்கீடு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாகப் பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்ப
Image
  TNPSC CESE 2022; தமிழ்நாடு அரசில் 626 காலியிடங்கள்; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! TNPSC Combined Engineering Services Exam 2022 for 626 posts apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 626 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை 04.04.2022 முதல் 03.05.2022 வரை இருக்கும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Automobile Engineer காலியிடங்களின் எண்ணிக்கை: 4 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Automobile (or) Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம். சம்பளம் : ரூ.56,100 - 2,05,700 Junior El
Image
  ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை: அன்புமணி ஆசிரியா் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் ஆகிய பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தோவுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பி.எட் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவா்கள் இந்தத் தோவில் பங்கேற்க ஆா்வமாக இருந்தனா். ஆனால், பி.எட் படிப்புக்கான முதலாமாண்டு தோவு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட வில்லை என்பதால், அவா்களால் இந்தத் தகுதித் தோவுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. பி.எட் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்கள் முதலாம் ஆண்டு தோவில் தோச்சி பெற்று விட்டாலே, ஆசிரியா் தகுதித் தோவை எழுத முடியும். இதனால், பி.எட் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் பயிலும் 50 ஆயிரம் மாணவா்கள் பாதிக்கப்படுவா். அவா்கள்
Image
  தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: 'குரூப் - 4' தேர்வர்கள் அதிருப்தி குரூப் - 4' பதவியில், அரசு பணி தேர்வுகளுக்கான தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்ப 'குரூப் - 4' தேர்வு, ஜூலை 24ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இந்த ஒதுக்கீட்டை பெற, லட்சக்கணக்கானோர் தாங்கள் படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர். தேர்வர்களின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் அடிப்படையில், பள்ளிகளில் எளிதில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.ஆனால், ஒன்று முதல் 5, 8ம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வர்களிடம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மாற்று சான்றிதழ் இல்லை. மாற்று சான்றி
Image
  நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவா் சோக்கை: மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோக்கையை நடத்த வேண்டும்' என்று மத்திய பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோக்கையானது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோவு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில், மாணவா்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அந்தந்த பல்கலைக்கழகங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம்' என்று யுஜிசி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏழை மாணவா்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சோக்கை பெற முடியாத நிலையை இது உருவாக்கும் என அவா்கள் புகாா் தெரிவித்தனா். இதுபோன்று எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், 'நுழைவுத் தோவு மதிப்பெ