Posts

Showing posts from April 19, 2023
Image
  TNPSC Group 1 Results: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5446 காலிப் பணியிடங்கள் கொண்ட குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வுகள், கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.  இதேபோல், நிர்வாக அலுவலர், கிரேடு-IV உள்பட குரூப் 8 எழுத்துத் தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் எனவும், நிர்வாக அலுவலர், கிரேடு-III குரூப் 7 பி எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுகள் மொத்தம் 95 இடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பிரிவில் தேர்வாக முதல்நிலை, பிரதான தேர்வு, Oral Test ஆகியவை நடத்தப்படும். குரூப் 2 பிரிவில் 5446 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. இதில், பிரதான எ
Image
  தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட மன்றத்தில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (17.4.2023) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலுரை வழங்கினார்.  அதன் பின்னர் முதல்-அமைச்சர் சார்பில் கீதாஜீவன் வெளியிட்ட அந்த துறைகளுக்கான அறிவிப்புகள் வருமாறு:- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, பயனா ளியின் பங்கு தொகையை செலுத்து வதற்காக வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆயிரம் பேர் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். உயர்கல்வி பயிலும் ஆயிரம் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14 ஆயிரம் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் திட்டம் செயல்ப
Image
  டிஎன்பிஎஸ்சியின் 54 துறைகளில் மதிப்பெண், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி! டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத்தில் உள்ள 54 துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றினை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களில் இதனை செய்து முடிக்கவேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. 2003 மார்ச் மாதம் 10ம் தேதியிலிருந்து பதவியிலிருப்பவர்களின் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றை சரிபார்த்து தரவுகள் எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பானது திமுகவின் அரசுப் பணியாளர்கள் தேர்வுகள் தொடர்பாக சமீபமாக நடந்தேறும் புகார்கள் முறைகேடுகளுக்கு தக்க பாடமாக அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.   கடந்த 2022 ஆம் ஆண்டிலும் டிஎன்பிஎஸ்சி பதவி உயர்வு குறித்தான பிரச்சினை நடைபெற்றது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு 2021 அக்