Posts

Showing posts from August 23, 2014
உண்ணாவிரதம் இருந்த 2 பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர் - தினகரன்   ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போது கடைபிடிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பட்டதாரிகளில் 2 பெண் பட்டதாரிகள் நேற்று மயங்கி விழுந்தனர்.  நேற்று காலை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது நெல்லையை சேர்ந்த அருணா, பெரம்பலூரை சேர்ந்த முத்துக்கண்ணு ஆகிய பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.