Posts

Showing posts from March 20, 2023
Image
 ' இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை கீழ் கொண்டு வரப்படும்': பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை கீழ் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்து, உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: 'அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டங்கள் கட்டிடவும் ரூ .7000 கோடி செலவில் 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை' அரசு தொடங்கி உள்ளது. நடப்பாண்டில் , ரூ.2000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள்,
Image
  கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு லீக்? தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அங்கமாக செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில், கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. பின்னர், அது போலியானது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆன விவகாரத்தை தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு மற்றொரு தலைவலியாக நேற்று, உதவி பேராசிரியர் பணிக்கான நியமன அறிவிப்பு வெளியானது. பள்ளிக் கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில், இந்த அறிவிக்கை சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. லீக் ஆனதா? மொத்தம், 47 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கையில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, 4,136 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 15ல் துவங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனை