Posts

Showing posts from February 14, 2023
Image
 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ரிசல்ட் மார்ச்சில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் பொருட்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Image
  போட்டி தேர்வுக்கு எதிராக 17 முதல் போராட்டம் ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 17ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வுடன், போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், இந்த போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற நான்கு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.  இவர்கள், புதிதாக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஏற்கனவே தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பணி நியமனம் மேற்கொள்ள வலியுறுத்தியும், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், வரும் 17ம் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளனர்.