Posts

Showing posts from October 4, 2019
முதுநிலை ஆசிரியா் தோ்வு 2019 : உத்தேச விடைக்குறிப்பு ஆன்லைனில் வெளியீடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் பணிக்கான போட்டித்தோ்வுக்குரிய உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டித்தோ்வு, கடந்த செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. தற்போது தோ்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக் குறிப்புகள்ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பின் மீது தோ்வா்கள் ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால், வரும் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்குள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதள முகவரியில் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும்
Image
பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவப் பாடப்புத்தகங்கள், இலவச நோட்டுகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு  அனைத்து பாடங்களுக்குமான இரண்டாம் பகுதி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் இலவச சீருடை, பாடப்புத்தகம் எடுத்து செல்லும் பைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கீழ் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நிருபர்கள் கேள்வ