நகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது
பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்.
*ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.
சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும், வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால் இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும் அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான்.
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் சிறப்பு எப்போதோ காலாவதியாகத் தொடங்கிவிட்டது.
ஒரு தனியார் பள்ளி ஆசியரிடம் சென்று "உங்கள் சம்பளம் எவ்வளவு?" என்று கேளுங்கள். அவர் நிச்சயம் கூச்சத்தில் நெளிவார். சொல்லத் தயங்குவார். அதையும் மீறி சட்டென அவர் பதில் சொல்கிறார் எனில் அவர் சொல்வது பொய்யாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
காரணம் அவ்வளவு அருமையான, சூப்பரான சம்பளத்தை அந்தப் பள்ளி தரும் என்று நினைத்து விடாதீர்கள்.
தினக்கூலி செய்யும் ஒரு நபரின் மாத வருமானத்தைவிட தனியார் பள்ளியின் ஆசிரியருக்கு சம்பளம் குறைவுதான்.
ஆச்சர்யமாக இருக்கிறதா?
அப்படிஎன்றால் இதையும் படியுங்கள்... குறைந்த சம்பளத்தைக் கொடுத்து அவர்களிடம் வாங்கப்படும் வேலையானது, இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரனும் செய்யாத அளவுக்குக் கொடுமையானது.
காலை முதல் மாலை வரை தொடர்ச்சியான பாடவேளைகள், உட்காருவதற்கு நாற்காலிகளும் இருக்காது, தொண்டை தண்ணி வற்ற கத்த வேண்டிய சூழல், ஓய்வறைகள் இருக்கும்..ஆனால், ஒய்வு இருக்காது. வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகளும் செய்துகொடுப்பதில்லை.
சில பள்ளிகள், மாணவ மாணவியர் பயன்படுத்தும் பேருந்தை குறைந்தபட்சம் பெண் ஆசிரியைகள்கூட பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வகுப்பில் நின்றது போக பேருந்திலும் நின்றுகொண்டே பயணித்து செல்லும் களைப்பு சொல்லி மாளாது.
இது தவிர விடுமுறைகள் என்பது அரிதிலும் அரிதானது. வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கள்கிழமையோ விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியான மூன்று நாட்களுக்கான சம்பளம் பிடிப்பு என்ற அற்பத்தனமான ஐடியாக்களைப் பின்பற்றும் பள்ளிகளும் உண்டு.
கோடை விடுமுறையிலும் இவர்களுக்கு 'ஆன் டியூட்டி தான். எப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் புதிய சேர்க்கையையும், பாடநூல் விநியோகமும்,'கேன்வாஸ்' எனும் பெயரில் ஆள்பிடிப்பு வேலைகளையும் செய்ய ஆட்கள் தேவை.
இப்படிப்பட்ட நெருடலான வேளையில், விரக்தியில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேலையை உதறிவிடலாம் என்று ஒரு ஆசிரியர் நினைத்தாலும் அது முடியாது.
ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியிலமர்த்தும்போதே அவர்களின் அசல் சான்றிதழ்களை 'லாக்' செய்து வைத்துவிடுவார்கள்.
தேள் கொட்டிய திருடனை போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்போரின் பட்டியல் மிக நீண்டது. இதுபோக பிள்ளைகளைக் கண்டித்தால் பள்ளிக்கே சென்று ஆசிரியரை எச்சரிக்கும் பெற்றோர்களும், 'ஐ' பட விக்ரம் சொல்வதுபோல் 'அதுக்கும் மேல' சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் சென்னையில் தன்னை கண்டித்த ஆசிரியரை ரவுடிகளை அழைத்து சென்று அடித்து துவைக்கும் மாணவருமாக, பாதுகாப்பற்ற ஆசிரியர் பணி சூழலும், என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா? என சொல்லத் தூண்டும் ஆசிரியர்களின் டிராஜடி கதைகளும் நிறையவே உண்டு.
என்னதான் தீர்வு?
* சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் 'கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா' எனும் சொலவடைக்கு ஏற்றார்போல் ஆசியர்களை நோக்கி நீ இல்லாவிட்டால் இன்னொருவன் என்று பள்ளி நிர்வாகிகளால் ஏளனம் செய்யும் செய்யப்படும் நிலை மாற்றப்பட வேண்டும்.
* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பதுபோல தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் தனியே ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும்.
* தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசு நிர்ணயம் செய்ததுபோல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
* அரசே நேரடியாகத் தலையிட்டு உரிய சம்பளத்தை பெற்றுத்தர முன்வர வேண்டும்.
* விடுமுறைகளுக்கு சம்பளப் பிடித்தம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்
* ஆசிரியைகளுக்கு பேறுகால விடுமுறைக்குப் பின் பணி உத்தரவாதம் தரப்பட வேண்டும்
* முறையான வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்
* காரணமின்றி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது
* இன்க்ரீமென்ட் எனச் சொல்லப்படும் சம்பள உயர்வுகள் சரியான கால இடைவெளியில் தரப்பட வேண்டும் மேற்சொன்ன இவை அனைத்தையும் ஆசிரியர்களுக்கு செய்துகொடுப்பது மட்டுமே கல்வி போதித்து, வருங்கால சாதனையாளர்களை உருவாக்கும் சிற்பிகளாகிய ஆசியர்களுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும.
5 February 2015
உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யால்நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, 'நெட்' வினா முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை.
'ஸ்லெட்' தகுதித்தேர்வு:
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய, தேசிய அளவில், யு.ஜி.சி.,யால், 'நெட்' மற்றும் மாநில அளவில், 'ஸ்லெட்' தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டு தேர்வுகளும் மூன்று தாள்கள் கொண்டவை. இதில், முதல் இரண்டு தாள், 'அப்ஜெக்டிவ்' முறையிலும், மூன்றாம் தாள், விரிவான விடை அளிக்கும் முறையிலும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், விடைகளை திருத்துவதில் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, 'நெட்' தேர்வில், மூன்றாம் தாளையும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் கொண்டதாக, யு.ஜி.சி., மாற்றியது.
கடந்த ஆண்டில், 'நெட்' தேர்வு முறையில், மேலும் மாற்றம் செய்வது தொடர்பாக, மாணவர்கள், ஆய்வாளர்களிடம் யு.ஜி.சி., கருத்து கேட்டது. அதில் பலரும், மூன்றாம் தாளை விரிவான விடை அளிக்கும் வகையில் மாற்றக் கோரியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் டி.என்.ரெட்டி தலைமையிலான, இரு நபர் குழு ஆய்வு செய்து, சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. வரும், ஜூனில், 'நெட்' தேர்வு நடக்க உள்ளது. எனவே, ரெட்டி அறிக்கை தொடர்பாக, யு.ஜி.சி.யின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேர்வு முறையை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
'அப்ஜெக்டிவ்':
எனவே, 'நெட்' தேர்வில் மூன்றாம் தாள், 'அப்ஜெக்டிவ்' முறையிலேயே இந்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. மேலும், ரெட்டியின் அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க, துணை குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக, யு.ஜி.சி., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
குரூப் 1 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவிண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு முதல், அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி நடத்துகிறது. ஷெனாய் நகர் அம்மா அரங்கம், சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பயிற்சி மையங்கள் அதற்காக செயல் படுகின்றன.
கடந்த ஜூலை 20ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வில், மாநகராட்சி பயிற்சி வகுப்புகளில் படித்த, 45 பேர் கலந்து கொண்டனர். இதில், மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது, மாநகராட்சி சார்பில் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று, குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செல்ல உள்ள மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலை தேர்வு எழுதியதற்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன், சென்னை மாநகராட்சி கல்வி துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம்.
044-- - 2538 4232,
94451 94761 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...