Posts

Showing posts from May 11, 2023
Image
  இவர்களை போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும்... அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!! ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.  தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும். தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகு
Image
  பள்ளிகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வினியோகம்! 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியாகின. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித
Image
  அரசு பணி வழங்க கோரி 3-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 2013 ஆண்டு சென்னை டி பி ஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. 30 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் மீதமுள்ள 20 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்க கோரி இரு தினம் முன்பு டி பி ஐ வளாகத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கினர். மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 177 ல் குறிப்பிட்ட டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி வழங்குவோம் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மூன்றாவ
Image
  புதுச்சேரி பல்கலையில் சேர இன்று வரை விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி பல்கலையில் முதுகலை மற்றும் பட்டய படிப்புகளுக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக உதவி பதிவாளர் மகேஷ் செய்திக்குறிப்பு:தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்கலை பொது நுழைவுத் தேர்வு கியூட் (பி.ஜி) - 2023ன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலையில் பல்வேறு முதுகலை மற்றும் பட்டய படிப்புகளில் சேரலாம்.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை இணைய வழியில் பெறப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, காலக்கெடு இன்று 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களில் திருத்தங்களை நாளை முதல் 13ம் தேதி வரை செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Image
  மாநில கல்வி கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஜவஹர் நேசன் விலகல்! உதயசந்திரன் ஐஏஎஸ் மீது புகார் தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பேராசிரியர் ஜவஹர் நேசன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் தனிச் செயலாளருமான உதயசந்திரன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியின் நலனையும் மாநிலத்து இளைஞர்களின் எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு மாநிலத்தின் சரித்திர மரபுகளையும் தற்போதைய சூழலையும் கருத்தில் கொண்டு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு உருவாக்கியது. மிகச் சிறப்பான இந்த சரித்திர முன்முயற்சி எடுத்தமைக்கு முதல்வருக்கும் அவருடைய அரசுக்கும் நன்றியை உரிதாக்குகிறேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ மறுதலித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவு, மாநிலத்திற்கென்று தனித்துவமான கல்விக் கொள்கையின் அவசியம் எனும் முதல்வரின் லட்சிய நோக்கை உணர்த்தியது. தம