7 December 2021

 TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப்பெற்றால் என்னென்ன வேலைகளில் சேரலாம்?


டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ- தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது


இந்த குரூப் 2- குரூப் 2 ஏ தேர்வுகள் எழுதினால் தேர்ச்சி பெற்றால் எந்த பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். யாரெல்லாம் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வானது எப்படி நடத்தப்படும் போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்


டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.


டிஎன்பிஎஸ்சி குரூப் -2 ஏ கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.


தேர்வு எழுத தகுதியானவர்கள்: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 தேர்வு எழுதலாம்.


என்ன வேலையில் அமர்த்தப்படுவார்கள் :


சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்க பணியமர்த்தப்படுவர்.


குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அறிவிப்பாணை வெளியான பிறகும்கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்


 TNPSC 2022 - தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு 







 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு


அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் தொடர்ந்த மனுவில், பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017-18ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிபிட்டுள்ளார்.


தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளதாகவும், அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 100% சதவீதம் தமிழர்களையே நியமிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளதை சுட்டிக்காட்டி, நாளை தொடங்கவுள்ள தேர்வில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பதால், கடந்து 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

 2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு


2022ஆம் ஆண்டுக்கான் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.


சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார்.


அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார்.


அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக, குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், 2022ஆம் ஆண்டில், 5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5255 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. வரும் ஆண்டில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும். என்று அறிவித்தார்.


முறைகேடுகளைத் தடுக்க என்னவழி?


தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.


ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்குக் கொணடு வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. எனவே, இனி, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை, தேர்வு முடிந்தபின் தனியாக பிரித்தெடுக்கப்படும்.


டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலச்சந்திரன் கூறினார்

 அரசு காலி பணியிடங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி. திட்ட அறிக்கை இன்று வெளியீடு

அரசு பணிகளில் உள்ள காலியிடங்களுக்கு வரும் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி.இன்று வெளியிட உள்ளது.டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.மேலும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.அதன்படி 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...