Posts

Showing posts from March 27, 2023
Image
  பி.எஸ்சி. கணிதப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவு கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, கல்வி சூழலில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. அட்மிஷன், தேர்வு, கேம்பஸ் இன்டர்வியூ போன்றவை தொடர்ந்து நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பார்க்கும் போது, பி.எஸ்சி. கணிதப் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் கணித ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் செயல்திறனைப் பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பி.எஸ்சி கணிதப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்துள்ளது.   ஆனால் அதே நேரத்தில் பிசிஏ மற்றும் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையே 47 சதவீதமாகவும், 31 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 2 ஷிப்டுகளாக இயங்கும் ச
Image
  TNPSC: பரபரப்பு... குரூப் 4 தேர்வு முறைகேடு?- டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தேர்வர்கள் குரூப் 4 தேர்வில் தங்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவித்து, தேர்வர்கள் 40 பேர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24ஆம் தேதி தேதி வெளியான நிலையில், தேர்வு முடிவுகளில் முறைகேடு உள்ளதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டினர். குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள், தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல ஒரே தேர்வு மையத்தில் இருந்து தேர்வெழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் புகார் எழுந்தது.  இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.  தென்காசியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர
Image
  ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி - TNPSC அதிகாரியிடம் விளக்கம் கேட்பு : அமைச்சர் பழனிவேல் தியாகவேல் விளக்கம்!! டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின. இதற்கிடையே, தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.இதுதவிர, சமீபத்தில் வெளியான கு