28 November 2022

 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றியமைப்பு.. காரணம் இதுதான்




தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுளளது.



தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன.


பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்

 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சம்பளம் எவ்வளவு

 


பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி சிறிய கட்டுரை எழுத வேண்டி இருக்கும். மேலும் தமிழ் வாசிக்க தெரியும் என்பதை காட்டும் வகையில் சில தமிழ் பாராக்களை படித்து காண்பிக்க வேண்டி இருக்கும்.


தகுதித்தேர்வு தேதி மாற்றம்

 


தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.


டிசம்பர் 4ஆம் தேதி தகுதி தேர்வு


இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 2,748 கிராம உதவியாளர் தேர்வு : ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?




தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது.


இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணிகளுக்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.


5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிறைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணத்தினால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.


இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.



மேலும் கிராம உதவியாளர் பணிகான தேர்வு நுழைவு சீட்டை https://www.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் https://cra.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் மேலும் அந்தந்த மாவட்ட இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது தேர்வு? - முழு விபரம்!



தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 15 நாள் முதல் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். டிசம்பர் இரண்டாம் வாரம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி 23ந் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளது.


6,8,10,12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் 7,9,11- ம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதுவையில் காவலா் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்புப் பணி அலுவலா் குபேர சிவக்குமாரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை காவல் துறையில் 253 காவலா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.


 புதுவையைப் பூா்வீகமாக கொண்டவா்கள், வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் 83 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக தோச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரா்கள் 18 முதல் 24 வயதுக்குள் பட்டவா்களாக இருக்க வேண்டும். ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி, பிடி ஆகிய பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வுள்ளது. 


திங்கள்கிழமை முதல் (நவ.28) டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிறைவு செய்வதில் சந்தேகமிருந்தால் 0413-2231352, 2277900 ஆகிய தொலைபேசி எண்களில் வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதார...