Posts

Showing posts from February 18, 2023
Image
  11,409 மத்திய அரசுப் பணிகள்: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்து செய்து சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம்: பன்னோக்குப் பணியாளர் - 10,880 ஹவில்தார் - 529 மொத்த காலிப்பணியிடங்கள் - 11,409 தகுதி: 2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Apply' என்கிற பொத்தானை அழுத்த வேண்டும். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வெளியேறுங்கள். இணையவழி விண்ணப்பத்துக
Image
  TNTET தேர்வர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? - வழிமுறைகளை வெளியிட்டது TRB ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள்- II-- ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) திட்டமிட்டபடி கடந்த 03.02.2023 முதல் 15.02.2023 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று பிற்பகல் 6.00 மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது. Candidates who have appeared for the exam can download their View QP with Responses using the Steps given below :  Step 1 - Go to https://cviewtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp  Step 2- Enter Registration Number  Step 3 - Select Date of Birth  Step 4 - Select Date of Exam  Step 5- Select Batch  Step 6- Enter the Captcha letters  Step 7 Click Submit  Step 8 - Read the instructions  Step 9 - Select " Click here to view attempted
Image
  TNPSC: இவர்கள் எல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதில் புதிய சிக்கல்! தமிழக உயர்கல்வித்துறை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 58 இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் பாரம்பரியமான பட்டப்படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்று உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உயர்கல்வித்துறை குறிப்பிடும் இந்த 58 படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் தமிழக அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம். உயர்கல்வித் துறையால் நியமிக்கப்பட்ட குழு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் B.Com in Company Secretaryship படிப்பு வழக்கமான B.Com படிப்புக்கு இணையானது அல்ல. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் M.Sc. in Medical Sociology படிப்பு M.A. Sociology படிப்புக்கு இணையானது அல்ல. அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Com in Company Secretaryship மற்றும் B.Sc (Electronics) ஆகியவை முறையே M.Com ம
Image
  ஆசிரியர் பணிக்கு மீண்டும் போட்டித் தேர்வு - அரசாணையை ரத்து செய்யக்கோரி டெட் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஆசிரியர் பணிக்கு மீண்டும் போட்டித் தேர்வு அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணி நியமனத்திற்கு மீண்டும் போட்டித் தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்வோம் என திமுக கூறியது. இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்று கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், தங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆசிரியர் பணிக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149-ஐ நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முக்கியமாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் போராட்
Image
  ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கு எதிராக போராட்டிய 500க்கும் மேற்பட்டோர் கைது..!! தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மறு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை எண்.149 வெளியிட்டது. இதற்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும், பணி நியமனம் வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.   இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால் வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முற்பட்ட பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த போராட்டத்தில