Posts

Showing posts from July 28, 2013
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652கம்ப்யூட்டர்ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள்.    இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்டபல் வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பலவருடங்களா கநடந்தது. பலமுறை கைதுசெய்யப்பட்டுசிறையில்அடைக்கப்பட்டனர். சுப்ரீம்கோர்ட்டுஉத்தரவு இந்தநிலையில்,அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது .  இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள். இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட்.படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்