21 November 2024

 CBSE - 10, பிளஸ் 2 பொதுதேர்வு தேதி அறிவிப்பு.. 2025 பிப்ரவரி 15ல் தொடங்கும் தேர்வுகள்.. விபரம்



சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது.


மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.


சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாட ( entrepreneurship exam)தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ல் இயற்பியல், 24ம் தேதி புவியியல், 27 வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் என்பதும் தேர்வு தேதியில் காலையில் நடக்கும். பெரும்பலான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கும். சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

 TNPSC Group 2 Result 2024: குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- காண்பது எப்படி?



நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணைப்பில் சென்று குரூப் 2 தேர்வு முடிவுகளைக் காணலாம்.



2022-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மொத்தம் 383 பேர் குரூப் 2 ஏ தனி எழுத்தர், ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


குரூப் 2 தேர்வு நடந்தது எப்போது?


குரூப் 2 முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு, அதாவது 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு வெளியாகின. இதில் நேர்முகத் தேர்வு அல்லாதோருக்கும் நேர்முகத் தேர்வு கொண்டோருக்கும் தனித்தனியாகத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.


குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி தனியாக வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை https://www.tnpsc.gov.in/document/finalresult/03_2022_GROUP_IIA_SERVICES_PHASE_123_SEL.pdf என்ற இணைப்பில் காணலாம்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...