Posts

Showing posts from March 14, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை  இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.  அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வெயிட்டேஜ் முறை சரியே என வாதிட்டார் .அதன்பின்னர் நீதியரசர் எஸ். நாகமுத்து வழக்கு விசராணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.அடுத்தவாரத்தில் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வழக்கறிஞர்களின் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெறவில்லை. அவ்வழக்கின் விசாரணை அடுத்தவாரம் திங்களன்று நடைபெறக்கூடும் என தெரிகின்றது.
TNPSC : தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது?  நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே,பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரிதெரிவித்தார்.  மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த5-ம் தேதிவெளியிட்டது. அன்றே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. மத்திய,மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடவும் அரசு நலத் திட்டங்களை தொடரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆட்சிப் பொறுப்பிலுள்ள தலைவர்களின் படங்கள்,கட்சி சின்னங்கள் ஆகியவற்றை அரசுசம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து அப்புறப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியமனங்களுக்குத் தடை பள்ளி ஆசிரியர், கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது என்ப தால்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்திக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வ
NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவன செய்திகள் பின்னர்...
ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.  தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கும். அதன் பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்
இன்று (14.03.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் GROUPING MATTERS  1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)  2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q DEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS  3.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (REG. P.G. ASSISTANT IN TAMIL)  4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES  1.GRADUATE ASSISTANT  2.B.T. ASSISTANT  3.SECONDARY GRADE ASSISTANT  4. EQUIVALENCE  5.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS  6.FOR ORDERS AT 2.15 P.M. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~  WP.717
கடந்த செவ்வாயன்று இடம்பெற்றிருந்த CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் இன்று (14.03.2014) நீதியரசர் எஸ். நாகமுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.