9 December 2012

புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும் இடைநிலை ஆசிரியர்: ஊதிய விகிதம்: Pay Band 1: 5200--20200+2800+750 5200--20200 என்பது Pay Band 2800 என்பது Grade Pay (தர ஊதியம்) 750 என்பது Personnel Pay (தனி ஊதியம்) 01.12.2012 ன் படி மாத ஊதியம் : அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750 அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300 மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100 --------------------------- Total: ரூ.15150 ----------------------------- மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800 (வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் ) பட்டதாரி ஆசிரியர் : ஊதிய விகிதம்: Pay Band 2: 9300--34800+4600 9300--34800 என்பது Pay Band 4600 என்பது Grade Pay (தர ஊதியம்) 01.12.2012 ன் படி மாத ஊதியம் : அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600 =13900 அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 8750 x 72 =10008 மருத்துவப்படி (Medical Allowance:MA) = 100 --------------------------- Total: ரூ.24008 ----------------------------- மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600 (வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் )
முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...
TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ? பட்டதாரி ஆசிரியர்கள் : பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை. இடைநிலை ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை எந்த மாவட்டத்தில் நீங்கள் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியினை எந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளீர்களோ, அந்த மாவட்டம் தான் நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டிய மாவட்டமாகும். இதில் வீட்டு முகவரியை (Communication Address)பொருட்படுத்த தேவையில்லை .
வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்குஅழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம் விழா நேரம் மாற்றம் : சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னைஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால்,பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,.. பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை. கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன. இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. " டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும்ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி,"வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...