19 April 2022

 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் - ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!!




பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது.


தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.


அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


அதேபோல் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களும் கடந்த மார்ச் 9ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி முடிவடைந்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது

 வரும் 24, 25ம் தேதி குரூப் 7ஏ தேர்வு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்




வருகிற 24,25ம் தேதி நடைபெற உள்ள குரூப் 7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட அறிவிப்பு குரூப் 7 'ஏ' பணியில் அடங்கிய செயல் அலுவலர், கிரேடு 1 பதவிகளுக்கான எழுத்து தேர்வு வருகிற 23ம் தேதி(முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 24ம் தேதி(முற்பகல் மட்டும்) நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?- அன்புமணி கண்டனம்


குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியைப் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும், அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றும், இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும்தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

 TNPSC Group 4: முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி? 




TNPSC VAO group 4 exam syllabus how to download?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.


தற்போது தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பச் செயல்முறை 30.03.2022 முதல் ஆரம்பித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022.


இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் முழு சிலபஸையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிலபஸை எங்கு டவுன்லோடு செய்வது, சிலபஸில் என்ன உள்ளது என்பது பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.


தேர்வு முறை


குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.


பாடத்திட்டம்


முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதில், தமிழ் மொழிப்பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இதில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.


தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.


பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.


அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்


நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.


புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில.


வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்


தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.


இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.


பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் சில.


இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.


திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் வரும்.


இந்த குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். அல்லது தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினை பார்வையிடுங்கள். குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி சிலபஸை பதிவிறக்கம் செய்து அதற்கேற்றார் போல் தயாராகிக் கொள்ளுங்கள்.


இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும்.


இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.

 தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை... விண்ணப்பங்கள் வரவேற்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!




தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக அரசானது குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.


அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இதற்கான முழு கல்வி கட்டண செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் ஆண்டுதோறும் தகுதி உடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது.


இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 % ஒதுக்கீடானது மாணவர்களுக்கு கல்வி கற்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டு தற்போதைய கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், வருகிற 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கையானது தொடங்க உள்ளது.


எனவே விண்ணப்பிக்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர்கள் www.rte.tnschools. gov. in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானமானது 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையானது கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த 25 சதவிகிதத்தின் கீழ் மாணவர் சேர்க்கையானது ,மெட்ரிக் பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள் என மொத்தம் 355 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை போல் நாமக்கல் மாவட்டத்தில் 158 பள்ளிகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் 163 பள்ளிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 226 என 4 மாவட்டங்களிலும் மொத்தமாக 902 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...