Posts

Showing posts from June 15, 2013
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம் சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, கடைசி நாளான நேற்றுடன், 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, நேற்று வரை வழங்கப்பட்டன. இதில், 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரை விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், நேற்று, கடைசி நாள். நேற்றுடன், 1.42 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஒரு சில மாவட்டங்களில், சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தால், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, மேலும் சில ஆயிரங்கள் வரை அதிகரிக்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.