Posts

Showing posts from June 23, 2023
Image
  வேலைன்னு வந்துட்டா.. மதியம் 2.40 டூ இரவு 12.20! 9 மணி நேரமாக ஒரே இடத்தில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் 9 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை, குறைகளை, புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் மட்டுமே 9 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து தன்னை சந்திக்க வந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஓட்டுநர் சங்கப் பிரதிநிதிகள் என 80க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்தோரை சந்தித்து பேசியிருக்கிறார். வெறுமனே பேருக்கு சந்திக்காமல் அனைத்து சங்கத்தினருக்கும் உரிய நேரம் கொடுக்கப்பட்டு, அவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கி, தெரிவித்த குறைகள், கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். மீட்டிங் இதோ முடிந்துவிடும், அதோ முடிந்துவிடும் என நினைத்த அதிகாரிகள் பலரும் அமைச்சரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியிருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்துபேசி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் முன் வைத்த கோரிக்கைகள் மீது தீர்வு கா
Image
  தொகுப்பூதிய முறையினை கைவிட்டு அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.  எனவே, அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல, தொகுப்பூதியத்தில்
Image
  9 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு வேலை நாள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி தமிழகம் மற்றும் புதுவயல் ஒத்திவைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  மாநிலம் முழுவதும்.. இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.! இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை மேம்படுத்த தன்னார்வலர்களை கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ” இல்லம் தேடிக் கல்வி ” மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ,  இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.
Image
  அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை:வானதி சீன்வாசன் குற்றச்சாட்டு தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ளதாக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை, டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8.20 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வானதி சீனிவாசன் வழங்கினாா். மேலும், புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியா்கள் பற்றாக்குறையே தற்போது மாணவா்களின் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோக்கையும் குறைந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவா்களை ஒரே வகுப்பில் வைத்துதான் பாடம் நடத்துகின்றனா். பள்ளி கட்டமைப்பு தொடா்பான சிறிய பணிகளை பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினரே செய்து வருகின்றனா். தமிழகம் உயா்கல்வியில் சிறப்பான இட