27 March 2024

 கியூட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்



கியூட் யுஜி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர கியூட்-யுஜி நுழைவுத்தேர்வை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வுகள் இணைய வழியாகவும், நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான தேர்வுகள் மே 15ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.


ஜூன் 30ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகும். தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு முடிவடைவதாக இருந்தது.


 இந்நிலையில் "ஏராளமான மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 இரவு 9.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக் கழக மானிய குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் நேற்று தெரிவித்தார்.

 இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு



நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு எழுத, 23.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


 அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 


நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 10 லட்சத்து 18,593 மாணவர்கள், 13 லட்சத்து 63,216 மாணவிகள், 24 திருநங்கைகள் அடங்குவர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில் ஒரு லட்சத்து 55,216 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக என்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.


 2022-ம் ஆண்டில் 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். நடப்பாண்டு அதைவிட கூடுதலாக 23 லட்சத்து 81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு இன்று (மார்ச் 25) முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் பயிற்சி அளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு அதிகபட்சம் 40 பேர் இடம்பெறுவர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும். தினமும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து மையங்களிலும் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்.

 பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.


தமிழகத்தில், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வைவை பள்ளி மாணவா்கள், தனித்தேர்வா்கள் என மொத்தம் 9.26 லட்சம் தேர்வா்கள் எழுதுகின்றனா். முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. 


இது குறித்து மாணவா்கள் கூறுகையில், பொதுத்தேர்வை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளோம். தமிழ் பாடத்துக்கான வினாத்தாளில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அந்த இரு கேள்விகளும் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. உரைநடை, கட்டுரை, படிவம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த அனைத்து கேள்விகளுக்கும் சராசரியாக  மாணவா்களால் கூட எளிதாக பதிலளிக்க இயலும். 


இதில் நிச்சயம் 90 முதல் 95 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என நம்புகிறோம் என அவா்கள் தெரிவித்தனா். 17,633 பேர் வரவில்லை: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் உள்ளிட்ட இதர மொழிப் பாடங்களின் தேர்வைவை பள்ளி மாணவா்கள் 16,314 பேர்; தனித்தேர்வா்கள் 1,319 பேர் என மொத்தம் 17,633 தேர்வா்கள் எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


பத்தாம் வகுப்புக்கு அடுத்ததாக ஆங்கில பாடத்துக்கான தேர்வு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்.8-ஆம் தேதியுடன் பொதுத்தேர்வு நிறைவடையவுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...