Posts

Showing posts from September 15, 2022
Image
  TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரநவற்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது. பதவியின் பெயர் 1.கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை 2.பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை காலி இடங்கள்- 15 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு , பட்டப்படிப்பு* கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in) விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கTamil Nadu Public Service Commission (tnpscexams.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும் தேர்வு தேதி ஜனவரி 28 ஆம் தேதி; முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஊதிய விவரம் ரூ.20,900 முதல் ரூ.75,900 வரை கூடுதல் தகவல்களுக்கு: தமிழ் மொழியில்
Image
217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீடு! உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிப்பு. உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்.19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும்.
Image
  காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு காலாண்டு தேர்வில் பள்ளியளவில் நடத்திக்கொள்ளலாம் என புதிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வுகளை பள்ளிக்கல்வி துறை ஒரே அட்டவணையின் கீழ் நடத்தும். இதற்கான வினாக்களை பள்ளிக்கல்வித்துறை தேர்வு செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும். 6 முதல் 12ம் வகுப்புக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது வழக்கம். இந்நிலையில் காலாண்டு தேர்வுகளை நடத்துவதில் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி அளவில் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் எனவும், பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனவும், செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை எவ்