Posts

Showing posts from June 28, 2023
Image
  12 ஆண்டுகால கோரிக்கை! இதைக்கூடவா தமிழக அரசு நிறைவேற்ற முன்வரவில்லை?! அன்புமணி இராமதாஸ் ஆதங்கம்! தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காகப் பணியமர்த்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக பா.ம.க.தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுவதைப் போன்று அவர்களுக்கும் மே மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மிகச் சாதாரணமான கோரிக்கையைக் கூட நிறைவேற்றுவதற்கு அரசு முன்வரவில்லை என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு பலமுறை வாக்களித்தும் கூட அவை வாக்குறுதியாகவே உள்ளன.  பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்திரு
Image
  புதுச்சேரி: பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்.. புதுச்சேரியில் தற்போது அரசு பள்ளிக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்வது தொடர்பாக அடுத்தடுத்த பிரச்சினைகள் தொடர்ச்சியான முறையில் அரங்கேறி வருகிறது. மேலும் பணிவிடை மாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் புது பணி இடங்களுக்கு செல்லாமல் இருப்பதும் அதுமட்டுமில்லாத அவர்கள் தொடர்ச்சியான முறையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் செய்வதும் நீடித்து வருகிறது.  இவர்கள் சட்டமன்றம் மற்றும் முதலமைச்சரின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர்ச்சியான முறையில் போராட்டங்களையும் செய்து வருகிறார்கள். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்ட தான் இவர்களை பணியிடை மாற்றம் செய்து இருக்கிறது. ஆனால் அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாது தாங்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தான் தங்களை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள்.  இந்தநிலையில் இடமாறுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து பள்ளிக்கல்வி துணை இயக்குனர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வ
Image
  எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு - ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்! எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் உள்ள 37 மருத்துவக்கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.  இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  http://www.tnhealth.tn.gov.in மற்றும் http://www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர
Image
  18 வகையான போட்டி தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி உத்தேச தேதி அறிவிப்பு தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் தற்போதைய நிலை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விவரம், டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது. அதில் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கான குரூப் 2 பிரதான தேர்வு முடிவு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வனத்துறை தொழில் பழகுனர் பணி தேர்வு, தமிழக அரசு துறைகளில் உதவி பிரிவு அதிகாரி பணி தேர்வு, குரூப் 3 பதவிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் பணித் தேர்வு, மீன் வளத்துறை ஆய்வாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகின்றன. பொறியியல் பதவியில் 1083 பாலி பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சாலை ஆய்வாளர் பதவி தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகின்றன.  அதே போன்று கா