Posts

Showing posts from March 6, 2024
Image
  NEET UG 2024; நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி தேதி; இந்த ஆவணங்கள் முக்கியம்! NEET UG 2024:இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். தேசிய தேர்வு முகமை (NTA) பிப்ரவரி 9 ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே தேர்வான நீட் தேர்வான, மே 5, 2024 அன்று நடைபெறும்.  தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9 ஆகும். எனவே பதிவு செய்ய விரும்பும் இளங்கலை மருத்துவ ஆர்வலர்கள் புதிய NEET இணையதளம் https://exams.nta.ac.in/NEET/மூலம் NEET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ படிப்புகளை படிக்க நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். 12 ஆம் வகுப்பில் இயற்பி
Image
  Open Book Exam: தமிழ்நாட்டில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி இல்லை- அமைச்சர் அன்பில் மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக, மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரி வருகிறது.  இந்த நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய ப
Image
  நீட் : பள்ளி செல்லாமல் பயிற்சி நிலையம் செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ன நடக்கிறது? இந்தியாவில் டில்லி உள்பட பல்வேறு மாநிலங் களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டு களும் பள்ளிக்குச் செல்லாமல், பாடங்களைப் படிக் காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வ தாக சி.பி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரிய வந் துள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளும் பயிற்சி மய்யங்களும் இதற்கென தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு, அம்மாணவர்கள் பொதுத்தேர்வில் மட்டும் கலந்து கொள்ளும் வண்ணம் போலியாக அவர்களுக்கு வருகைப்பதிவும் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுழைவுத்தேர்வுகளுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தால் பள்ளிப் படிப்புக்கான தேவை குறைந்து வருவதாகவும் இதனால், மாணவர் களிடையே கற்றல் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப் படும் என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் (சி.பி.எஸ்.இ) இந்தியா முழுவதும் 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. டில்லி உள்பட பல்
Image
  பிளஸ் டூ ஆங்கில தாள்; தொடக்கமே ஷாக். 2 பொது அறிவு வினாக்கள் வேறு; மாணவர்கள் கூறுவது என்ன? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 5) நடைபெற்ற ஆங்கிலத் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 20 ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் கிட்டத்தட்ட 10 வினாக்கள் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் தேர்வு ஆரம்பித்த சிறிதுநேரத்திலே ஷாக் ஆகி விட்டனர். மற்ற வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரளவுக்கு எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக, பொது அறிவு தொடர்பாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று உங்கள் கண்களை பாதுகாப்பது என்பது பற்றி சிறு குறிப்பு எழுத கேட்கப்பட்டிருந்தது. கண்களை பாதுகாப்பது பற்றிய விடை தெரிந்திருந்தாலும், தமிழ் வழி மாணவர்கள் வாக்கியங்களாக சற்று திணறியி