Posts

Showing posts from February 6, 2024
Image
  TNPSC Group 4 Exam: 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை; குரூப் 4 தேர்வு பதவிகளுக்கான தகுதி என்ன? டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி  எ ன்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 28.02.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை: 108 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 - 71,900 இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி) காலியிடங்களின் எண்ணிக்கை: 2486 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 - 71,900 இளநிலை உதவியாளர் (பிற பணி கள்) காலியிடங்களின் எண்ணிக்கை: 118 (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - 10, வக்பு வாரியம் - 27, குடிநீர் வடிகால
Image
  பல்கலைக்கழகங்களுக்கான முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு..! வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளது.  இந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த
Image
  குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு ஆரம்பம்.! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா.? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2024 அன்று தொடங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 4 அடங்கிய பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது.  இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2024 அன்று காலை 10 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.  இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆகி
Image
 10,12 ஆம் வகுப்பு தொலைதூர கல்வி சான்றிதழ் செல்லாது