Posts

Showing posts from March 22, 2022
Image
  Social Welfare Workers: மக்கள் நலப் பணியாளர்களுக்கு எப்போது பணி கிடைக்கும்? - அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! 2011ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவிற்கு தடை பெற்றது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பாக பேசப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மக்கள் நல பணியாளர்களை நியமித்தது திமுக அரசு. ஆனால் அதன்பின்னர் வந்த அதிமுக அரசு அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பியது. அவர்கள் நீதிமன்றம் சென்று மீண்டும் வேலை தரவேண்டும் என்ற உத்தரவை பெற்ற போது அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது.  இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்க
Image
  மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின் மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி நடந்தபோது மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதிமுக ஆட்சியின் போது மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர் இதுகுறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் இதனால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Image
  மக்கள்.நல பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு.. தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!! டி ஆர்.பி தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டி தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததால் தமிழ்நாடு தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட 32 வகையான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி மார்ச் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.ஆர்.பி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளது. Click here download Trb syllabus
Image
  திண்டிவனத்தில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 26-ம்தேதி திண்டிவனத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், " www.tnprivatejobs.tn.gov.in" என்ற இணையதள முகவரியில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு(Resume) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை 04146-226417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Image
  குரூப் - 2 மற்றும் 2 ஏ' பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை முடிவதால், தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116 இடங்களையும், குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. தேர்வில், 20 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.  பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள்  விரைந்து விண்ணப்பிக்குமா
Image
  இனி மாணவர்கள் யாரும் இப்படி பள்ளிக்கு வரக்கூடாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!! 18 வயது பூர்த்தி அடையாத மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அனுமதிக்கக்கூடாது.  மேலும் 18 வயது பூர்த்தியடையாத மாணவர்களை பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. இதனையடுத்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அவர்களை பள்ளிக்குள் வர அனுமதிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
  17 புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்:அமைச்சா் க.பொன்முடி தகவல் வரும் கல்வியாண்டில் 17 புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் சீ.கதிரவன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்:- தமிழக அரசின் சாா்பில் 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத் துறை சாா்பாக ஒரு கல்லூரியும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அறநிலையத் துறையால் ஏற்கெனவே 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கல்வியாண்டில் இருந்து தொடங்கப்படுகின்றன. அரசு கலை, அறிவியல் கல்லூரி மட்டுமல்ல, தொழில் கல்வி படிப்போருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசு கலை, கல்லூரிகளில் பெண்கள் அதிகம் படிக்கின்ரனா். பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் சேருவதில்லை. இதைக் கருத்தில் கொண