Posts

Showing posts from May 7, 2023
Image
  கல்வியைப் பாதிக்கும் முட்டுக்கட்டையாக ( TNTET) ஆசிரியர் தகுதித் தேர்வு! முன்பொரு காலத்தில் மருத்துவமனைகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் சர்வ ரோக நிவாரணியாக தானா ஆனா மாத்திரை இருந்து வந்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனாலும் அது நோயுற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கியதோடு கேலியாகப் பேசுபடு பொருளாக இருந்தது என்பதும் மறக்க இயலாது.  ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு தானா ஆனா மாத்திரை போன்று தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வை முன்மொழிவதும் கட்டாயமாக்குவதும் அதையொட்டிப் பதவி உயர்வு கலந்தாய்வு நடைமுறையை ஒத்திவைப்பதும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வே ஆசிரியருக்குரிய தகுதியான பொது மற்றும் தொழில் கல்வி தேர்ச்சி அடையாதோருக்காக முன்மொழியப்பட்ட ஒன்றாகும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்திற்கும் முறையான கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இனச் சுழற்சி முறையில் நியாயமாக நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஊரோடு ஒத்து வாழ் என்னும் முதுமொழிக்கேற்ப ஏனைய
Image
  கலை அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது எப்படி?  தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நாளை(மே.8) முதல் விண்ணப்பிக்கலாம்.www.tngasa.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(மே.8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை-அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வார்கள்.  கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படிக்கும்போதே மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஆங்கில மொழித்திறன் அறிவு, போட்டித்தேர்விற்கு தயாராக பயிற்சி போன்றவையும் அளிக்கப்படுகிறது.  இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்களை ww
Image
  தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பரபரப்பு..! டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் அதில் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதும் சிலர் மதியம் 1.30 மணிக்கு வராததால் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட தாமதமாக வந்த தேர்வர்கள் வெளியில் காத்திருந்த நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Image
  பொறியியல் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் 2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு/ அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப செயல்முறை நாளை முதல் தொடங்கப்படுகிறது. மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation centre (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். நாளை முதல் (05.05.2023) தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்
Image
என்ன படிப்பது? எங்குப் படிப்பது? அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுக் குழு - தொலைபேசி எண்ணும் அறிவிப்பு வரும் மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விவரிக்க வழிகாட்டுக் குழுவைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 3,123 பள்ளிகளில் அமைத்துள்ளது   இது குறித்த வீடியோவை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பது என்ற சந்தேகம் அனைத்து மாணவர்களுக்கும் எழும் ஒன்று தான். மேலும், நான் டாக்டர் ஆக வேண்டும், இன்ஜீனியர் ஆக வேண்டும் என்று கனவுகள் கொண்ட மாணவர்களுக்கு எங்குப் படிக்க வேண்டும் என்ற புரிதல் இருக்காது. இந்த நிலையில், இதற்குத் தீர்வு காண, மாணவர்களுக்கு என்று உயர்கல்வி வழிகாட்டிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டிக் குழுவில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்தக் கல்லூரிகளில் படிக்கலாம். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆகிய வழிமுறைகள் வழங்கப்படும். மேலும்,
Image
  Uniform Services Recritment Board : காவல் துறையில் எஸ்ஐ காலியிடங்கள் - ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ் ஆர்பி) 2023ம் ஆண்டு காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பட்டதாரிகள், இணையம் வழியாக ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். சரியான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆண்களுக்கு 469 காலிப் பணியிடங்களும், பெண்களுக்கு 152 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 621 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல் துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு தலா 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவ