Posts

Showing posts from July 3, 2023
Image
  TN TRB BEO Notification: வட்டார கல்வி அலுவலர் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. பள்ளிக் கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு நேரடி முறையில் ஆட்கள் தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.  முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. தாமதமான அறிவிப்பு அதேபோல 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்
Image
  இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை புதிய அதிரடி அறிவிப்பு!! 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை மற்றும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைகழகங்களும் இணைத்து 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிபிற்கு கல்வி கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, இணையத்தள முகவரி, நுழைவுத் தேர்வு போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடந்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் என்.சி.இ.டி. என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து அந்த நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாதம் இறுதியில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளது. இந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கான இணையத்தள முகவரியும் மற்றும் அதற்கான பதிவுகள்
Image
  நடுநிலைப் பள்ளிகளில் 99% காலி பணியிடங்கள்: அன்புமணி அதிர்ச்சித் தகவல் நடுநிலைப் பள்ளிகளில் 7 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தாலும், அவற்றில் 80 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 99% பணியிடங்கள் காலியாகவே உள்ளன' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது.  தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் 7 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தாலும், அவற்றில் 80 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 99% பணியிடங்கள் காலியாகவே உள்ளன.  உயர்நிலைப்பள்ளிகளில் 6000 உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களில் 2000 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை