Posts

Showing posts from August 3, 2022
Image
  இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் தேர்வர்கள் கோரிக்கை டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பழைய நிலையையே கடைபிடிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை என நடத்தப்பட்ட தேர்வுகள் தற்போது 9.30 மணி முதல் 12.30 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் கொள்குறி வகை வினாக்களில் ஏ,பி,சி,டி என விடை இருந்த நிலை தற்போது ஏ,பி,சி,டி,ஈ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் பதட்டமடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, 'கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல மாணவர்கள் சரியாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க வேறு வழிமுறைகளை கையாள முன்வர வேண்டும். எனவே, தேர்வு நேரத்தை பழைய முறையிலும், விடை ஈ-ஐ நீக்கவும் நீக்க தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும்' என்றார்.
Image
  11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் புதிய பாடம் அறிமுகம்! தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் நடப்புக்கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத்திறன்கள் என்ற புதிய பாடம் நடப்புக்கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, தொழிற்கல்விப்பிரிவில் கம்பியூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்பியூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு தற்போதுள்ள பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மேலும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வக
Image
  பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியீடு மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுக்கு பிறகு,விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டல் செய்வது, மறு மதிப்பீடு செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்பேரில் பல மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களில் பலருக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் பல மாணவ, மாணவியரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.