Posts

Showing posts from May 20, 2022
Image
  TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்: சென்னை, கோவையில் நடத்தும் கல்வி மையம் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப்-4 தேர்வு ‌ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது. 7301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப்-2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப்-4 வகுப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது‌. மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த Dr. அம்பேத்கர் கல்வி மையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து Dr. அம்பேத்கர் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறுகையில், ''குரூப்-4 தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் தயாராக எட்டு வாரங்கள் மட்டும் உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலு
Image
  பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு! 11 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள அரசு பொது தேர்வு மையங்களில் மாணவ,மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்நிலையில் 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள
Image
  TNPSC Group 2: செக் லிஸ்ட் ரெடி பண்ணுங்க; தெரியாத கேள்விகளுக்கு இப்படி பதில் கொடுங்க! TNPSC Group 2 Exam check list and Answering methods: தமிழகத்தில் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான செக் லிஸ்ட் என்னென்ன மற்றும் தெரியாத கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தேர்வு நடைபெறும் நாளுக்கு முன் இரண்டு நாட்களுக்கு நல்ல தூக்கம் மற்றும் நல்ல உணவு அவசியம். தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள். அடுத்ததாக, ஹால் டிக்கெட், அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவை), கருப்பு மை பேனா, தேவைப்பட்டால் முகக்கவசம் போன்ற தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பேனாக்களை தயாராக வைத்திருப்பது நல்லது. தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு தயார்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு மையத்தில் 9 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது. எனவே அதற்கேற்றாற்போ
  தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளை திறக்க கோரிக்கை! தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்யக்கூடாது எனவும், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை தவிர்க்கலாம் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், 'தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31 ஆம் தேதி தேர்வுகள் முடிந்தாலும், ஜூன் மாதம் 10 முதல் 12ஆம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் மாதம் 20 அல்லது 27ஆம் தேதி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் ஏற்கெனவே ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வ