Posts

Showing posts from May 5, 2023
Image
  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் ரூ.48, பதிவுக் கட்டணமாகரூ.2 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம் இணையதள வாயிலாக செ
Image
  தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது அருமையான வேலைவய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் அதாவது, தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா), காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை), காவலர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மேற்கண்ட 3 பிரிவுகளுக்கும் சேர்த்து , ஆண்களுக்கு, 464 காலிப்பணியிடங்களும், பெண்களுக்கு 151 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 615 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   காலியிட விவரங்கள் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) : 366 பணியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஆர்) : 145 பதவிகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (TSP) : 110 பணியிடங்கள் கல்வித்தகுதி விண்ணப்பத
Image
  TN 12th Result 2023: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள், நேரம் இதுதான்: 5 வழிகளில் பார்க்கலாம் - எப்படி? 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம்.  தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். முடிந்த விடைத்தாள் திருத்தம் இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை ஆசிரியர்கள் தொடங்கினர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலை