23 July 2014

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார்.

2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிஒரு அறிக்கை தாக்கல் செய்தார். 

அது குறித்து அவர் கூறியதாவது:– ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இது 0.34 சதவீதமாகும். தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 

அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர். அது 2.99 சதவீதம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். 

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 311 பேர் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையில், முதல் – அமைச்சர் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைந்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தார்.

06.02.2014–ல் 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. 

முதல் – அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, தேர்ச்சி பெற்றிருந்தவர்களுடன் இவர்களையும் சேர்த்து 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளது.ஆனால் தகுதி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
FLASH NEWS TNTET : சட்டப்பேரவையில் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி

 தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பினார்... இதற்க்கு பதில் அளித்த அமைச்சர் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகவல்
விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க "TRB"தீவிரம்..! 

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது. 

அதிக வேலை பளு: 
டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. 

இணையதளம்: 
இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. 

இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும். கால அவகாசம்: மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. 

அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. 

இம்மாத இறுதிக்குள்...: இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது..

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...