18 October 2013

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார்

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் . 

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ்வழக்குகள் இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார்.

 அன்றையதினம் மூன்று வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக் 21 மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு. 

 முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ் வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
10,000 பட்டதாரி ஆசிரியர் & 3,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு 

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து, தகுதித் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித் தேர்வில் மீண்டும் மாற்றம்.

 கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது. நெட் தகுதித் தேர்வு பல்கலைக்கழகம், கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் மட்டும் இந்ததகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி.யும் மாநில அளவிலான ஸ்லெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி. அனுமதித்துள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகின்றன. ஆண்டுக்கு 2 முறை ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவிப் பேராசிரியர் ஆகலாம். 

அதேநேரத்தில் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே அந்த தகுதி ஏற்றுக்கொள்ளப்படும்.முன்பெல்லாம் நெட் தகுதித் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில், லட்சக்கணக்கான விடைகளை மதிப்பீடு செய்ய வேண்டியதிருந்தால் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்குறி வகைக்கு (ஆப்ஜெக்டிவ்) மாற்றப்பட்டது. 

அதன்படி பொதுஅறிவு, குறிப்பிட்ட பாடம் ஆகிய அனைத்திலும் விடைகளை ஓ.எம்.ஆர். ஷீட்டில் மார்க்கிங்செய்யும் முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்வுமுறையில் மாற்றம் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வோரின் தகுதியை வெறுமனே ஆப்ஜெக்டிவ் முறை தேர்வால் சோதித்தறிய முடியாது என்று யு.ஜி.சி.கருதுகிறது. அதோடு, கேள்விகளின் தரத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

 இதுகுறித்து யு.ஜி.சி. துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் கூறுகையில், "நெட் தகுதித்தேர்வில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதற்காக ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் நெட் தேர்வு முறை மாற்றி அமைக்கப்படும்" என்றார். ஏற்கனவே இருந்ததைப் போன்று கேள்விகளுக்கு விரிவாக பதில் அளிக்கும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

 விரைவில் தேர்வு முடிவு இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித்தேர்வு, கடந்த ஜூன் மாதம்நடந்தது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரிகள் தேர்வு எழுதி உள்ளனர். விடைத் தாள்கள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. 

நெட் தேர்வுக்குழு கூட்டம், சில நாட்களுக்கு முன் நடந்தது. எனவே, தேர்வு முடிவு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று யு.ஜி.சி. துணைத்தலைவர் எச்.தேவராஜ் தெரிவித்தார். ஜே.ஆர்.எப். தகுதி நெட் தேர்வு, உதவி பேரா சிரியர் தகுதித்தேர்வாக மட்டு மல்லாமல் ஜே.ஆர்.எப். என்று சொல்லப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்புக்காகவும் (ஆராய்ச்சி படிப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகை) நடத்தப்படுகிறது. 

நெட் தேர்வு தகுதித்தேர்வு என்ற போதிலும் குறிப்பிட்ட தேர்ச்சி மதிப்பெண் பெறும் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக யு.ஜி.சி. அறிவித்துவிடுவதில்லை.அதிக மதிப்பெண் பெறும் ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில் 1,600 பேர் ஜே.ஆர்.எப். தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...