Posts

Showing posts from January 23, 2022
  TN TRB Annual Planner: 9494 பணியிடங்கள்.. வெளியானது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தகவல்கள்! முழு விவரம்!! தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறையில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வுகளுக்கான வருட திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு மே மாதம் வெளியாகி ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் 4989 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல் உயர்கல்வித்துறையில் கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நட
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 2 வது வாரதில் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் ஒரு போட்டித்தேர்வு எழுதவேண்டும் என்று அறிவித்து  உள்ளனர். இடைநிலை ஆசிரியர் 3092 பட்டதாரி ஆசிரியர் 1087 டெட் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு cut off அடிப்படையில் ஆசிரியர் தேர்வு செய்ய படுவார்கள்.
  குரூப் 2, 2ஏ மற்றும் 4 தேர்வுகள் தள்ளிப்போகுமோ? மத்திய, மாநில அரசு துறைகளில் பணியாளர் நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. யு.பி.எஸ்.சி., தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் மட்டுமே கொரோனா குறைந்தபோது நடத்தப்பட்டன.தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் கல்லுாரி மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளனர்.இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடித் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தாண்டு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். தமிழ் பாடத்தில் தேர்வு, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்து வருகின்றனர்.ஆனால் அதிகரித்து வரும் கொரோனா இந்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா 3ம் அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு அமலாகியுள்ளது. மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தால் இந்த ஆண்டும் அரசு வேலை கானல் நீராகிவிடுமோ என புலம்புகின